F

படிப்போர்

Wednesday 17 February 2016

277. மாத்திரை

277
திருவேட்களம்
(சிதம்பரம் பல்கலை வளாகத்தில்)

        தாத்தன தானன தாத்தன தானன
        தாத்தன தானன            தனதான

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
  வாழ்க்கையை நீடென            மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
   மாப்பரி வேயெய்தி               அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
   பாற்படு ஆடக                     மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
   பாற்கட லானென             வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
   சாத்தியர் மேவிய                  பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
   தாட்பர னார்தரு                    குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
   மீக்கமு தாமயில்                 மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
   வேட்கள மேவிய                பெருமாளே

பதம் பிரித்தல்

மாத்திரை ஆகிலும் நா தவறாள் உடன்
வாழ்க்கையை நீடு என மதியாமல்

மாத்திரை ஆகிலும் - ஒரு சிறிய அளவுகூட நா தவறாளுடன் - வாக்குத் தவறாத மனைவியுடன் வாழ்க்கையை - நடத்தும் இல்லற வாழ்க்கையை நீடு என மதியாமல் - பெரிதென மதிக்காமல்

மாக்களை யாரையும் ஏற்றிடு(ம்) சீலிகள்
மா பரிவு எய்தி அனுபோக

மாக்களை - (அறிவு கெட்ட) மனிதர்கள் யாரையும் - யாராயிருந்தாலும் ஏற்று - அவர்களை எல்லாம் ஏற்று அனுபவிக்கும் சீலிகள் - ஒழுக்கத்தை உடைய (பொது மகளிரின் மீது) மா - மிக்க பரிவே எய்தி - அன்பைப் பூண்டு அனுபவிக்கும்

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்
பால் படு ஆடகம் அது தேட

பாத்திரம் ஈது என - பாத்திரம் இவன் என்று (பிறர் கூற) மூட்டிடும் - மூண்டு எழுகின்ற ஆசைகள் பாற்படு -
ஆசைகளில் ஈடுபட்டு ஆடகம் அது தேட - பொன்னைத் தேட

பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி
பாற்கடலான் என உழல்வேனோ

பார்க் களம் மீதினில் - பூமியில் உள்ள மூர்க்கரையே - உலோபிகளையே கவி - (எனது) பாடலில் பாற்கடலான் என - பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் இவன் என்று புகழ்ந்து உழல்வேனோ - திரிவேனோ?

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய
சாத்தியர் மேவிய பத வேளே

சாத்திரம் ஆறையும் - ஆறு சமய சாத்திரங்களையும்
நீத்த - கடந்த மனோலய - மன வேகம் ஒடுங்கும்படி வைத்த சாத்தியர் - சாமர்த்தியம் உள்ள பெரியோர்கள் மேவிய - விரும்பிப் போற்றும்
பத வேளே - திருவடியை உடைய வேளே


தாத்தரிகிட சேக் எனும் நட
தாள் பரனார் தரு குமரேசா

தாத்தரிஎனும் - இவ்வாறான தாளங்களைக் கொண்ட மா - சிறந்த நட - நடனம் செய்கின்ற தாள் - திருவடிகளை உடைய பரமனார் - சிவபெருமான்
தரு - அருளிய குமரேசா - குமரேசனே
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர்
மிக்க அமுது ஆம் மயில் மணவாளா

வேத்திர சாலம் அது - அம்புக் கூட்டங்களை ஏற்றிடும் - கொண்டு திரியும் வேடுவர் - வேடர்களின் மிக்க அமுதாம் மயில் - மிக்க அமுதம் போன்ற மயிலின் இயல் வள்ளியின் மணவாளா - கணவனே

வேத்த(ய)மதாம் மறை ஆர்த்திடு சீர் திரு
வேட்களம் மேவிய பெருமாளே
வேத்தயமதாம் - அறியப்படுவதான மறை - வேதங்கள் ஆர்த்திடு - ஒலி செய்யும் சீர் - அழகான திருவேட்களம் மேவிய பெருமாளே - திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதிக்காமல், அறிவு இல்லாத மக்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஏற்று அனுபவிக்கும் விலைமாதர்களின் அன்பைப் பூண்டு, அதற்கான பொருள் தேட, உலோபிகளைத் திருமால்( உத்தமமானவன்) என புகழ்ந்து பாடித் திரிவேனோ?
ஆறு சாத்திரங்களையும் கடந்து மன வேகம் ஒடுங்கும்படியான வல்லமை பெற்ற பெரியோர்கள் விரும்பிப் போற்றும் திருவடியை உடைய வேளே, தாள சுத்தமாக நடனம் செய்யும் சிவபெருமான் அருளிய குமரனே, வேடர்களின் மகளான மயிலின் சாயலைக் கொண்ட வள்ளியின் கணவனே, வேத ஒலி முழங்கும் திருவேட்களத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, பெண்ணாசை ஒழிந்து உன் திருவடியைத் தொழ அருள் புரிவாயாக

 சாத்திரம் ஆறையும் நீத்தமனோலய
ஆறு சாத்திரங்கள் -- 1 வேதாந்தம் 2 வைசேடிகம் 3 பாட்டம்   4 பிரபாகரம் 5 பூர்வ மீமாஞ்சை 6 உத்தர மீமாஞ்சை

தலைப்புச் சொற்கள்


” tag:
277
திருவேட்களம்
(சிதம்பரம் பல்கலை வளாகத்தில்)

        தாத்தன தானன தாத்தன தானன
        தாத்தன தானன            தனதான

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
  வாழ்க்கையை நீடென            மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
   மாப்பரி வேயெய்தி               அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
   பாற்படு ஆடக                     மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
   பாற்கட லானென             வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
   சாத்தியர் மேவிய                  பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
   தாட்பர னார்தரு                    குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
   மீக்கமு தாமயில்                 மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
   வேட்கள மேவிய                பெருமாளே

பதம் பிரித்தல்

மாத்திரை ஆகிலும் நா தவறாள் உடன்
வாழ்க்கையை நீடு என மதியாமல்

மாத்திரை ஆகிலும் - ஒரு சிறிய அளவுகூட நா தவறாளுடன் - வாக்குத் தவறாத மனைவியுடன் வாழ்க்கையை - நடத்தும் இல்லற வாழ்க்கையை நீடு என மதியாமல் - பெரிதென மதிக்காமல்

மாக்களை யாரையும் ஏற்றிடு(ம்) சீலிகள்
மா பரிவு எய்தி அனுபோக

மாக்களை - (அறிவு கெட்ட) மனிதர்கள் யாரையும் - யாராயிருந்தாலும் ஏற்று - அவர்களை எல்லாம் ஏற்று அனுபவிக்கும் சீலிகள் - ஒழுக்கத்தை உடைய (பொது மகளிரின் மீது) மா - மிக்க பரிவே எய்தி - அன்பைப் பூண்டு அனுபவிக்கும்

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்
பால் படு ஆடகம் அது தேட

பாத்திரம் ஈது என - பாத்திரம் இவன் என்று (பிறர் கூற) மூட்டிடும் - மூண்டு எழுகின்ற ஆசைகள் பாற்படு -
ஆசைகளில் ஈடுபட்டு ஆடகம் அது தேட - பொன்னைத் தேட

பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி
பாற்கடலான் என உழல்வேனோ

பார்க் களம் மீதினில் - பூமியில் உள்ள மூர்க்கரையே - உலோபிகளையே கவி - (எனது) பாடலில் பாற்கடலான் என - பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் இவன் என்று புகழ்ந்து உழல்வேனோ - திரிவேனோ?

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய
சாத்தியர் மேவிய பத வேளே

சாத்திரம் ஆறையும் - ஆறு சமய சாத்திரங்களையும்
நீத்த - கடந்த மனோலய - மன வேகம் ஒடுங்கும்படி வைத்த சாத்தியர் - சாமர்த்தியம் உள்ள பெரியோர்கள் மேவிய - விரும்பிப் போற்றும்
பத வேளே - திருவடியை உடைய வேளே


தாத்தரிகிட சேக் எனும் நட
தாள் பரனார் தரு குமரேசா

தாத்தரிஎனும் - இவ்வாறான தாளங்களைக் கொண்ட மா - சிறந்த நட - நடனம் செய்கின்ற தாள் - திருவடிகளை உடைய பரமனார் - சிவபெருமான்
தரு - அருளிய குமரேசா - குமரேசனே
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர்
மிக்க அமுது ஆம் மயில் மணவாளா

வேத்திர சாலம் அது - அம்புக் கூட்டங்களை ஏற்றிடும் - கொண்டு திரியும் வேடுவர் - வேடர்களின் மிக்க அமுதாம் மயில் - மிக்க அமுதம் போன்ற மயிலின் இயல் வள்ளியின் மணவாளா - கணவனே

வேத்த(ய)மதாம் மறை ஆர்த்திடு சீர் திரு
வேட்களம் மேவிய பெருமாளே
வேத்தயமதாம் - அறியப்படுவதான மறை - வேதங்கள் ஆர்த்திடு - ஒலி செய்யும் சீர் - அழகான திருவேட்களம் மேவிய பெருமாளே - திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதிக்காமல், அறிவு இல்லாத மக்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஏற்று அனுபவிக்கும் விலைமாதர்களின் அன்பைப் பூண்டு, அதற்கான பொருள் தேட, உலோபிகளைத் திருமால்( உத்தமமானவன்) என புகழ்ந்து பாடித் திரிவேனோ?
ஆறு சாத்திரங்களையும் கடந்து மன வேகம் ஒடுங்கும்படியான வல்லமை பெற்ற பெரியோர்கள் விரும்பிப் போற்றும் திருவடியை உடைய வேளே, தாள சுத்தமாக நடனம் செய்யும் சிவபெருமான் அருளிய குமரனே, வேடர்களின் மகளான மயிலின் சாயலைக் கொண்ட வள்ளியின் கணவனே, வேத ஒலி முழங்கும் திருவேட்களத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, பெண்ணாசை ஒழிந்து உன் திருவடியைத் தொழ அருள் புரிவாயாக

 சாத்திரம் ஆறையும் நீத்தமனோலய
ஆறு சாத்திரங்கள் -- 1 வேதாந்தம் 2 வைசேடிகம் 3 பாட்டம்   4 பிரபாகரம் 5 பூர்வ மீமாஞ்சை 6 உத்தர மீமாஞ்சை

தலைப்புச் சொற்கள்


No comments:

Post a Comment

Your comments needs approval before being published