F

படிப்போர்

Wednesday 7 August 2013

240.உரைத்த சம்ப்ரம

240
தனிச்சயம்
சோழவந்தான் அருகில்

               தனத்த தந்தன தனதன தந்தத்
                   தனத்த தந்தன தனதன தந்தத்
               தனத்த தந்தன தனதன தந்தத்              தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
  கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
  தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட்         குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
  டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
   டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்     தமுமேல்கொண்
உரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
  பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
  றடத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித்           தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
  துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
  கவத்தை வந்துயி ரலமரு மன்றைக்              கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
   டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
   டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டுட்                 டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
  டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
  செருக் களந்தனில் நிருதுர் தயங்கச்             சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
   திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
   தருக்கு சம்புகள் நிணமது சிந்தப்             பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலிய லன்பைப்
   படத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
   றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப்                பெருமாளே

பதம் பிரித்து உரை

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் குருடாகி

உரைத்த சம்ப்ரம = எல்லாரும் புகழும்படி மிக ஒழுங்காக இருந்த வடிவு =  உருவம் திரங்கி = வதங்கி கறுத்த = கறுப்பாக இருந்த குஞ்சியும் = தலை மயிரும் வெளிறிய = வெளுத்து பஞ்சு ஒத்து = பஞ்சு போல் ஆகி ஒலித்திடும் செவி = நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடு உற = செவிடாகி ஒள் கண் குருடாகி = ஒளி பொருந்திய கண்கள் குருடாகி

உரத்த வெண் ப(ல்)லும் நழுவி மதம் கெட்டு
இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் மேல் கொண்டு

உரத்த = பலத்துடன் அழுத்தமாயிருந்த வெண் பல்லும் = வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி = நழுவி விழுதலுற்று மதம் கெட்டு = நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து இரைத்து = மூச்சு வாங்கி கிண் கிண் என இருமல் எழுந்திட்டு = கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி உளைப்புடன் = வேதனையுடன் தலை கிறு கிறு எனும் = தலை கிறுகிறு என்னும் பித்தமும் மேல் கொண்டு = பித்தமும் மேல் கொண்டு எழ

இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி
பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும்

இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி = இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக பழுத்து = வெளுத்து உளம், செயல், வசனம் = மனம், வாக்கு, செயல் இவைகள் வரம்பு அற்று = ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து  அடுத்த பெண்டிரும் = சேர்ந்துள்ள மாதர்களும் எதிர் வர நிந்தித்து = எதிரே வர இகழ்ந்து பேசி அனைவோரும் = யாவரும்

அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி
துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே

அசுத்தன் என்றிட = (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்வு அது குன்றி = உணர்ச்சி குறைந்து போய் துடிப்பதும் = நாடி துடிப்பதும் சிறிது உளது = கொஞ்சமே இருக்கின்றது இலது என்கைகக்கு = இல்லை என்றே சொல்லலாம் என்னும்படி கட்ட நிலை அடைந்து அவத்தை வந்து = கேவல நிலை வந்து கூடி உயிர் அலமரும் = உயிர் வேதனைப்படும் அன்றைக்கு  அருள்வாயே = அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக

திரித்திஎன்று இட்டு
இடக்கை துந்துமி முரசு முழங்க
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள்

திரித்திரிஎன்று இட்டு = இத்தகைய ஒலிகளை எழுப்பிக் கொண்டு இடக்கை = இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, முரசு = பேரிகை வகைகள் முழங்க = முழக்கமிட செருக் களம்தனில் = போர்க்களத்தில்  நிருதர் = அசுரர்கள் தயங்க = கலக்கம் கொள்ள சில பேய்கள் = சில பேய்கள்

தரித்து மண்டையில் உதிரம் அருந்த
திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா


தரித்து மண்டையில் = மண்டை ஓட்டை எடுத்து ஏந்தி உதிரம் = இரத்தத்தை அருந்த = குடிக்க திரள் = கூட்டமான பருந்துகள் = பருந்துகள் குடர்கள் பிடுங்க = குடல்களைப் பிடுங்க தருக்கும் = களிப்பறும் சம்புகள் = நரிகள் நிணம் அது = மாமிசத்தை சிந்த = சிந்திச் சிதற பொரும் வேலா = சண்டை செய்யும் வேலனே

தடம் சிகண்டியில் வயலியில் அன்பை
படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
தனிச்சயம் தனில் இனிது உறை கந்த பெருமாளே

தடம் = பெருமை வாய்ந்த சிகண்டியில் = மயில் மீதும் வயலியினில் = வயலூர் என்னும் தலத்திலும் அன்பைப் படைத்த நெஞ்சினில் = அடியார்களின் உள்ளத்திலும் இயல் செறி = தகுதி நிறைவுற்ற கொங்கில் = கொங்கு நாட்டில் தனிச்சயம் தனில் = தனிச்சயம் என்னும் தலத்திலும் இனிது உறை = இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே

சுருக்க உரை
உடல் வன்மை குறைந்து, தலைமயிர் வெளுத்து, காது செவிடாகி,
கண்கள் குருடாகிஇருமல் மிகுந்து, இரத்தம் குன்றி, மனம், வாக்கு, செயல் இவை ஒரு அளவு ஒழுங்கீனமான நிலையைக் கடந்து, நாடி குறைந்துத் துன்பப்படும் அந்நாளில் எனக்கு அருள் புரிவாயாக பறைகள் முழங்க போர்க்களத்தில் அசுரர்கள் கலங்க, பேய்களும், நரிகளும் மாமிசத்தையும், இரத்தத்தையும் உண்ணும்படி போர் புரிந்த வேலா மயில் மீதும், வயலூரிலும் அன்பு நிறைந்த அன்பர்கள் மனத்திலும், தனிச்சயம் என்னும் தலத்திலும்  உறையும் பெருமாளே என் உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாய்

ஒப்புக

உயிர் அலமரும் அன்றைக்கு

மிழலையுள்ளிர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்

கொண்மினே  --                                         திருநாவுக்கரசர் தேவாரம்
” tag:
240
தனிச்சயம்
சோழவந்தான் அருகில்

               தனத்த தந்தன தனதன தந்தத்
                   தனத்த தந்தன தனதன தந்தத்
               தனத்த தந்தன தனதன தந்தத்              தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
  கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
  தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட்         குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
  டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
   டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்     தமுமேல்கொண்
உரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
  பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
  றடத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித்           தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
  துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
  கவத்தை வந்துயி ரலமரு மன்றைக்              கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
   டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
   டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டுட்                 டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
  டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
  செருக் களந்தனில் நிருதுர் தயங்கச்             சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
   திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
   தருக்கு சம்புகள் நிணமது சிந்தப்             பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலிய லன்பைப்
   படத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
   றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப்                பெருமாளே

பதம் பிரித்து உரை

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் குருடாகி

உரைத்த சம்ப்ரம = எல்லாரும் புகழும்படி மிக ஒழுங்காக இருந்த வடிவு =  உருவம் திரங்கி = வதங்கி கறுத்த = கறுப்பாக இருந்த குஞ்சியும் = தலை மயிரும் வெளிறிய = வெளுத்து பஞ்சு ஒத்து = பஞ்சு போல் ஆகி ஒலித்திடும் செவி = நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடு உற = செவிடாகி ஒள் கண் குருடாகி = ஒளி பொருந்திய கண்கள் குருடாகி

உரத்த வெண் ப(ல்)லும் நழுவி மதம் கெட்டு
இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் மேல் கொண்டு

உரத்த = பலத்துடன் அழுத்தமாயிருந்த வெண் பல்லும் = வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி = நழுவி விழுதலுற்று மதம் கெட்டு = நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து இரைத்து = மூச்சு வாங்கி கிண் கிண் என இருமல் எழுந்திட்டு = கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி உளைப்புடன் = வேதனையுடன் தலை கிறு கிறு எனும் = தலை கிறுகிறு என்னும் பித்தமும் மேல் கொண்டு = பித்தமும் மேல் கொண்டு எழ

இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி
பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும்

இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி = இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக பழுத்து = வெளுத்து உளம், செயல், வசனம் = மனம், வாக்கு, செயல் இவைகள் வரம்பு அற்று = ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து  அடுத்த பெண்டிரும் = சேர்ந்துள்ள மாதர்களும் எதிர் வர நிந்தித்து = எதிரே வர இகழ்ந்து பேசி அனைவோரும் = யாவரும்

அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி
துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே

அசுத்தன் என்றிட = (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்வு அது குன்றி = உணர்ச்சி குறைந்து போய் துடிப்பதும் = நாடி துடிப்பதும் சிறிது உளது = கொஞ்சமே இருக்கின்றது இலது என்கைகக்கு = இல்லை என்றே சொல்லலாம் என்னும்படி கட்ட நிலை அடைந்து அவத்தை வந்து = கேவல நிலை வந்து கூடி உயிர் அலமரும் = உயிர் வேதனைப்படும் அன்றைக்கு  அருள்வாயே = அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக

திரித்திஎன்று இட்டு
இடக்கை துந்துமி முரசு முழங்க
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள்

திரித்திரிஎன்று இட்டு = இத்தகைய ஒலிகளை எழுப்பிக் கொண்டு இடக்கை = இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, முரசு = பேரிகை வகைகள் முழங்க = முழக்கமிட செருக் களம்தனில் = போர்க்களத்தில்  நிருதர் = அசுரர்கள் தயங்க = கலக்கம் கொள்ள சில பேய்கள் = சில பேய்கள்

தரித்து மண்டையில் உதிரம் அருந்த
திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா


தரித்து மண்டையில் = மண்டை ஓட்டை எடுத்து ஏந்தி உதிரம் = இரத்தத்தை அருந்த = குடிக்க திரள் = கூட்டமான பருந்துகள் = பருந்துகள் குடர்கள் பிடுங்க = குடல்களைப் பிடுங்க தருக்கும் = களிப்பறும் சம்புகள் = நரிகள் நிணம் அது = மாமிசத்தை சிந்த = சிந்திச் சிதற பொரும் வேலா = சண்டை செய்யும் வேலனே

தடம் சிகண்டியில் வயலியில் அன்பை
படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
தனிச்சயம் தனில் இனிது உறை கந்த பெருமாளே

தடம் = பெருமை வாய்ந்த சிகண்டியில் = மயில் மீதும் வயலியினில் = வயலூர் என்னும் தலத்திலும் அன்பைப் படைத்த நெஞ்சினில் = அடியார்களின் உள்ளத்திலும் இயல் செறி = தகுதி நிறைவுற்ற கொங்கில் = கொங்கு நாட்டில் தனிச்சயம் தனில் = தனிச்சயம் என்னும் தலத்திலும் இனிது உறை = இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே

சுருக்க உரை
உடல் வன்மை குறைந்து, தலைமயிர் வெளுத்து, காது செவிடாகி,
கண்கள் குருடாகிஇருமல் மிகுந்து, இரத்தம் குன்றி, மனம், வாக்கு, செயல் இவை ஒரு அளவு ஒழுங்கீனமான நிலையைக் கடந்து, நாடி குறைந்துத் துன்பப்படும் அந்நாளில் எனக்கு அருள் புரிவாயாக பறைகள் முழங்க போர்க்களத்தில் அசுரர்கள் கலங்க, பேய்களும், நரிகளும் மாமிசத்தையும், இரத்தத்தையும் உண்ணும்படி போர் புரிந்த வேலா மயில் மீதும், வயலூரிலும் அன்பு நிறைந்த அன்பர்கள் மனத்திலும், தனிச்சயம் என்னும் தலத்திலும்  உறையும் பெருமாளே என் உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாய்

ஒப்புக

உயிர் அலமரும் அன்றைக்கு

மிழலையுள்ளிர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்

கொண்மினே  --                                         திருநாவுக்கரசர் தேவாரம்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published