F

படிப்போர்

Monday 26 November 2012

161.அதிருங் கழல்


     பதி எங்கிலும் இருந்து விளையாடி

       பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.

 

      தனனந் தனன தந்த ...... தனதான 

      தனனந் தனன தந்த ...... தனதான

       

அதிருங் கழல்ப ணிந்து          னடியேனுன்
      
அபயம் புகுவ தென்று         நிலைகாண

இதயந் தனிலி ருந்து                க்ருபையாகி
     
இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி                நடமாடும்
     
இறைவன் தனது பங்கி        லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து             விளையாடிப்
     
பலகுன் றிலும மர்ந்த           பெருமாளே.

 

  161 குன்றுதோறாடல்

  பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல்.

முருகக் கடவுள் மலைக்   கடவுளாதலின் அவரை  

மலைக் கிழவன்கிரிராஜன்குறிஞ்சி வேந்தன்

என்றும் அழைப்பர்

   .

 

   பதம் பிரித்து உரை

 

அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன்

அபயம் புகுவது என்று நிலை காண 

அதிரும்ஒலிக்கின்ற கழல் பணிந்து கழல்கள் அணிந்த உன் திருவடிகளை வணங்கி உன் அடியேன் உன் அடியோன் உன் அபயம் புகுவது என்று உன்னிடம் சரணாகதி அடைவது எப்போதுநிலை காண (இந்த நிலையில்லாத வாழ்வினின்று  பிழைத்திருக்கும்) நிலையைக் காண்பதற்கு.

 

இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே  

இதயம் தனில் இருந்து என் உள்ளத்தில் வீற்றிருந்து

க்ருபை ஆகி அருள் கூர்ந்து இடர்என்னுடைய துன்பங்கள் சங்கைகள்ஐயங்கள் (யாவும்கலங்கஎன்னை விட்டு நீங்க அருள்வாயேஅருள் புரிவாயாக.

 

எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும்

இறைவன் தனது பங்கில் உமை பாலா 

எதிர் அங்கு ஒருவர் இன்றிநிகர்ப்பவர் ஒருவரும் இல்லாது நடமாடும்நடனம் செய்கின்ற. இறைவன்சிவபெருமானுடைய தனது பங்கில்ஒரு பாகத்தில் உறையும் உமை பாலாஉமா தேவியின் மகனே

 

பதி எங்கிலும் இருந்து விளையாடி

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே. 

பதி எங்கிலும் இருந்து விளையாடிதலங்கள் எல்லா இடத்திலிருந்தும் வீற்றிருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளேபல மலைகளிலும் உறையும் பெருமாளே.

 

சுருக்க உரை

 

 உன் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து, உன்னிடம் சரணம்  அடைவது எப்போது? நிலை பேற்றை அடைய உன்னிடம் நான் சரணம்    புகுவேன். எனக்கு அருள் புரிந்து, என் துன்பங்களும்,

ஐயங்களும் நீங்க   அருள் புரிவாயாக   நிகர் இல்லாமல் நடனம் செய்யும் சிவபெருமானின் ஒரு பாகத்தில்  உறையும் உமா தேவியின் மகனே, எல்லா மலைத் தலங்களிலும்   வீற்றிருக்கும் பெருமாளே, என் இடர்களையும் கலக்கங்களையும் நீக்கி   அருள் செய்ய வேண்டும்.

 





    
” tag:

     பதி எங்கிலும் இருந்து விளையாடி

       பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.

 

      தனனந் தனன தந்த ...... தனதான 

      தனனந் தனன தந்த ...... தனதான

       

அதிருங் கழல்ப ணிந்து          னடியேனுன்
      
அபயம் புகுவ தென்று         நிலைகாண

இதயந் தனிலி ருந்து                க்ருபையாகி
     
இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி                நடமாடும்
     
இறைவன் தனது பங்கி        லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து             விளையாடிப்
     
பலகுன் றிலும மர்ந்த           பெருமாளே.

 

  161 குன்றுதோறாடல்

  பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல்.

முருகக் கடவுள் மலைக்   கடவுளாதலின் அவரை  

மலைக் கிழவன்கிரிராஜன்குறிஞ்சி வேந்தன்

என்றும் அழைப்பர்

   .

 

   பதம் பிரித்து உரை

 

அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன்

அபயம் புகுவது என்று நிலை காண 

அதிரும்ஒலிக்கின்ற கழல் பணிந்து கழல்கள் அணிந்த உன் திருவடிகளை வணங்கி உன் அடியேன் உன் அடியோன் உன் அபயம் புகுவது என்று உன்னிடம் சரணாகதி அடைவது எப்போதுநிலை காண (இந்த நிலையில்லாத வாழ்வினின்று  பிழைத்திருக்கும்) நிலையைக் காண்பதற்கு.

 

இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே  

இதயம் தனில் இருந்து என் உள்ளத்தில் வீற்றிருந்து

க்ருபை ஆகி அருள் கூர்ந்து இடர்என்னுடைய துன்பங்கள் சங்கைகள்ஐயங்கள் (யாவும்கலங்கஎன்னை விட்டு நீங்க அருள்வாயேஅருள் புரிவாயாக.

 

எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும்

இறைவன் தனது பங்கில் உமை பாலா 

எதிர் அங்கு ஒருவர் இன்றிநிகர்ப்பவர் ஒருவரும் இல்லாது நடமாடும்நடனம் செய்கின்ற. இறைவன்சிவபெருமானுடைய தனது பங்கில்ஒரு பாகத்தில் உறையும் உமை பாலாஉமா தேவியின் மகனே

 

பதி எங்கிலும் இருந்து விளையாடி

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே. 

பதி எங்கிலும் இருந்து விளையாடிதலங்கள் எல்லா இடத்திலிருந்தும் வீற்றிருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளேபல மலைகளிலும் உறையும் பெருமாளே.

 

சுருக்க உரை

 

 உன் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து, உன்னிடம் சரணம்  அடைவது எப்போது? நிலை பேற்றை அடைய உன்னிடம் நான் சரணம்    புகுவேன். எனக்கு அருள் புரிந்து, என் துன்பங்களும்,

ஐயங்களும் நீங்க   அருள் புரிவாயாக   நிகர் இல்லாமல் நடனம் செய்யும் சிவபெருமானின் ஒரு பாகத்தில்  உறையும் உமா தேவியின் மகனே, எல்லா மலைத் தலங்களிலும்   வீற்றிருக்கும் பெருமாளே, என் இடர்களையும் கலக்கங்களையும் நீக்கி   அருள் செய்ய வேண்டும்.

 





    

No comments:

Post a Comment

Your comments needs approval before being published