F

படிப்போர்

Saturday 3 November 2012

131.சினத்தவர்


முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
        செகுத்தவ ருயிர்க்குஞ்                        சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
        திருப்புகழ் நெருப்பென்             றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
        நிசிக்கரு வறுக்கும்                           பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
        நிறைப்புக ழுரைக்குஞ்                செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
        தகுத்தகு தகுத்தந்                                  தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
        தளத்துட னடக்குங்                          கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
        சிரித்தெரி கொளுத்துங்                    கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
        திருத்தணி யிருக்கும்                      பெருமாளே.
-131 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்

தனத்தன.......தன பேரி

தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா

தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை

சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும் பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும். செகுத்தவர் உயிர்க்கும் கொல்லுபவர்களுடைய உயிருக்கும். சினமாக = கோபத்துடன் (நோக்கி).

சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.

நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும். மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும். நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)

நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும் பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும் நிறைப் புகழ் = உனது நிறை புகழை உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.

தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும் தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன் தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த. கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.

சினத்தையும் = கோபத்தையும் (அழித்து) உடல் சங்கரித்து = உடலை அழித்து அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும் சிரித்து = (தனது) சிரிப்பினால் எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.

தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்). குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு எண் = யாவரும் மதிக்கத் தக்க திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கோபம் கொண்டவர்களின் தலைக்கும், பகைமை கொண்டவர் குடிக்கும், கொலை செய்வோர் உயிருக்கும், சிரிப்பவர்களுக்கும், பழிப்பவர்களுக்கும், திருப்புகழ் நெருப்பு போன்ற உண்மை என்பதை நாம் அறிவோம். திருப்புகழ் ஓதுதல் நினைத்ததைத் தரும், மனத்தை உருக்கும், பிறப்பை அறுக்கும், நெருப்பை எரிக்கும், மலையைப் பொடி படுத்தும். ஆதலால் உனது புகழை ஓதும் திருப்பணியை எனக்குப்
பணித்திடுவாய்.

பேரி, உடுக்கைப் பறை இவைகளின் பேரொலியோடும், படைகளோடும் போருக்கு வந்த சூரர்களை அழித்து, அந்தப் பிண மலைகளைச் சிரிப்பினால் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலனே, தினை விளையும் மலையில் வள்ளியின் கொங்கையில் சுகித்து, சிறந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிறைப் புகழைப் பாடும் பணியை எனக்குத் தருக.

விளக்கக் குறிப்புகள்

இந்தத் திருப்புகழ் முருகனின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும். முதல் இரண்டு அடிகளில் துட்டர்களைத் தண்டித்தலையும், அடுத்த இரண்டு அடிகள் அடியார்களைக் காப்பதையும், ஈற்று இரண்டு அடிகள் அங்ஙனம் செய்வற்கு எடுத்துக் காட்டுகளையும் காணலாம். ஏழாவது அடியில் அசுரர்களை அழித்ததையும், எட்டாவது அடியில் வள்ளியை மணந்து அருள் புரிந்ததையும் அருணகிரியார் எடுத்துக் காட்டுகிறார்.

இருமலுரோகம் என்று தொடங்கும் திருப்புகழை நோய் தீர்க்கும் மந்திரத் திருப்புகழ் என்றால், சினத்தவர் முடிக்கும் என்று தொடங்கும் பாடலைச் சித்தி தரும் தந்திரத் திருப்புகழ் என்றும் கூறுவர் ( வ.சு. செங்கல்வராய பிள்ளை).

ஒப்புக

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்    குருநாதா                        ...                               திருப்புகழ், கருப்புவிலில்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு   மெனவோதும்        ...                                     திருப்புகழ், இருப்பவல்.

1. சூரர் சினத்தையும் உடல் சங்கரித்து அம் மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா......
அழிக்கப்பட்ட அசுரர்களின் பிணக் குவியலை எரித்துச் சாம்பலாக்கினார்.
அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த      ...                    கந்த புராணம்


” tag:

முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
        செகுத்தவ ருயிர்க்குஞ்                        சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
        திருப்புகழ் நெருப்பென்             றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
        நிசிக்கரு வறுக்கும்                           பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
        நிறைப்புக ழுரைக்குஞ்                செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
        தகுத்தகு தகுத்தந்                                  தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
        தளத்துட னடக்குங்                          கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
        சிரித்தெரி கொளுத்துங்                    கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
        திருத்தணி யிருக்கும்                      பெருமாளே.
-131 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்

தனத்தன.......தன பேரி

தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா

தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை

சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும் பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும். செகுத்தவர் உயிர்க்கும் கொல்லுபவர்களுடைய உயிருக்கும். சினமாக = கோபத்துடன் (நோக்கி).

சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.

நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும். மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும். நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)

நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும் பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும் நிறைப் புகழ் = உனது நிறை புகழை உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.

தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும் தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன் தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த. கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.

சினத்தையும் = கோபத்தையும் (அழித்து) உடல் சங்கரித்து = உடலை அழித்து அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும் சிரித்து = (தனது) சிரிப்பினால் எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.

தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்). குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு எண் = யாவரும் மதிக்கத் தக்க திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கோபம் கொண்டவர்களின் தலைக்கும், பகைமை கொண்டவர் குடிக்கும், கொலை செய்வோர் உயிருக்கும், சிரிப்பவர்களுக்கும், பழிப்பவர்களுக்கும், திருப்புகழ் நெருப்பு போன்ற உண்மை என்பதை நாம் அறிவோம். திருப்புகழ் ஓதுதல் நினைத்ததைத் தரும், மனத்தை உருக்கும், பிறப்பை அறுக்கும், நெருப்பை எரிக்கும், மலையைப் பொடி படுத்தும். ஆதலால் உனது புகழை ஓதும் திருப்பணியை எனக்குப்
பணித்திடுவாய்.

பேரி, உடுக்கைப் பறை இவைகளின் பேரொலியோடும், படைகளோடும் போருக்கு வந்த சூரர்களை அழித்து, அந்தப் பிண மலைகளைச் சிரிப்பினால் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலனே, தினை விளையும் மலையில் வள்ளியின் கொங்கையில் சுகித்து, சிறந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிறைப் புகழைப் பாடும் பணியை எனக்குத் தருக.

விளக்கக் குறிப்புகள்

இந்தத் திருப்புகழ் முருகனின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும். முதல் இரண்டு அடிகளில் துட்டர்களைத் தண்டித்தலையும், அடுத்த இரண்டு அடிகள் அடியார்களைக் காப்பதையும், ஈற்று இரண்டு அடிகள் அங்ஙனம் செய்வற்கு எடுத்துக் காட்டுகளையும் காணலாம். ஏழாவது அடியில் அசுரர்களை அழித்ததையும், எட்டாவது அடியில் வள்ளியை மணந்து அருள் புரிந்ததையும் அருணகிரியார் எடுத்துக் காட்டுகிறார்.

இருமலுரோகம் என்று தொடங்கும் திருப்புகழை நோய் தீர்க்கும் மந்திரத் திருப்புகழ் என்றால், சினத்தவர் முடிக்கும் என்று தொடங்கும் பாடலைச் சித்தி தரும் தந்திரத் திருப்புகழ் என்றும் கூறுவர் ( வ.சு. செங்கல்வராய பிள்ளை).

ஒப்புக

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்    குருநாதா                        ...                               திருப்புகழ், கருப்புவிலில்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு   மெனவோதும்        ...                                     திருப்புகழ், இருப்பவல்.

1. சூரர் சினத்தையும் உடல் சங்கரித்து அம் மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா......
அழிக்கப்பட்ட அசுரர்களின் பிணக் குவியலை எரித்துச் சாம்பலாக்கினார்.
அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த      ...                    கந்த புராணம்


No comments:

Post a Comment

Your comments needs approval before being published