F

படிப்போர்

Thursday 30 August 2012

23.கண்டுமொழி


கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்தல்

***********************
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு
பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்

பண்டு வினை கொண்டு = பழவினை தாக்க உழன்று = திரிந்துவெந்து விழுகின்றல் = நான் வெந்து விழுவதை. கண்டு = பார்த்து  பங்கய பதங்கள் = உன் தாமரை போன்ற திருவடிகளை தந்து = கொடுத்து புகழ் ஓதும் = (உன்னுடைய) புகழை ஓதும்.

பண்புடைய சிந்தை அன்பர் தங்களில் உடன் கலந்து
பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்

பண்புடைய சிந்தை  = பண்பு கொண்ட மனம் உடைய. அன்பர் தங்களில் உடன் கலந்து = அடியார்களுடன் சேர்ந்து. பண்பு பெற = நான் நற் குணம் அடைய வேண்டி அஞ்சல், அஞ்சல் என = பயப்பட வேண்டாம் என்று கூறி வாராய் = வருவாயாக.

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இ(ஈ)ண்டு
வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி

வண்டு படுகின்ற = வண்டுகள் ஓசை செய்யும் தொங்கல் = மாலையை கொண்டு = பூண்டு உற நெருங்கி இண்டு = மிக நெருங்கி அழுத்தமான வம்பினை அடைந்து = (முலைக்) கச்சு பூண்டதான சந்தின் = சந்தனக் குழம்பில் மிக மூழ்கி = மிக முழுகி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை
வந்து அழகுடன் கலந்த மணி மார்பா

வஞ்சியை = வஞ்சிக் கெடி போன்ற வள்ளியை முனைந்த = வருத்துகின்ற கொங்கை மென் குற மடந்தை = கொங்கைகளை உடைய  மெல்லிய வள்ளியின் செம் கை = செவ்விய கைகளை
வந்து அழகுடன் = அவள் இருக்கும் வள்ளி மலைக்கு வந்து கலந்த மணி மார்பா = கலந்த அழகிய மார்பனே.

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே

திண் திறல் புனைந்த அண்டர் = திண்ணிய வலிமை கொண்ட
தேவர்கள் தங்கள் அபயங்கள் கண்டு = தம்மாட்டு அபயம் புகுவதைப் பார்த்து செம் சமர் புனைந்து = செவ்விய போர்க்கோலம் பூண்டு துங்க மயில் மீதே = பரிசுத்தமான மயில் மேல்

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து
செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

சென்று அசுரர் அஞ்ச = சென்று அசுரர்கள் பயப்படும்படி வென்று = வெற்றி பெற்று குன்றிடை = திருப்பரங்குன்றத்தில்  மணம் புணர்ந்து மணம் செய்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே = செந்தில் அமர்ந்த பெருமாளே. 
சுருக்க உரை

இனிக்கும் சொற்கள், யானைத் தந்தம் பேன்ற கொங்கைகள், மேகம் போன்ற கூந்தல் என்று உவமை கண்டு, மிக வருந்தி, விலை மாதர்கள் வசப்பட்டு, எந்நாளும் விதியின் பயனாய் நின்று, பண்டை விதியின் தாக்கம் இது என்று அறிந்து, நான் வெந்து விழுவதைக் கண்டு, தாமரை போன்ற உன் திருவடிகளின் புகழ் ஓதும் அடியார்களுடன் கலந்து, நானும் குணம் அடைவதற்குப் பயப்படாதே என்று வரவேண்டும்.

கச்சு அணந்த வள்ளியை அடைய, அவள் இருந்த மலைக்கு வந்து அவளுடன் கலந்த மணி மார்பனே. வலிமை உள்ள தேவர்கள் தம்மிடம் அபயம் புகுவதைக் கண்டு, போர்க்கோலம் பூண்டு, மயில் மீது வந்து, அசுர்களை அழித்து, வள்ளியைத் திருப்பரங்குன்றத்தில் மணம் புரிந்த பெருமாளே, அஞ்சேல் என்று வந்து அடியார்களுடன் சேர அருள் புரிய வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

சந்து = சந்தனம். வஞ்சியை முனிந்த =   கொடி போலும் இடையை வருத்துகின்ற. 

” tag:

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்தல்

***********************
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு
பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்

பண்டு வினை கொண்டு = பழவினை தாக்க உழன்று = திரிந்துவெந்து விழுகின்றல் = நான் வெந்து விழுவதை. கண்டு = பார்த்து  பங்கய பதங்கள் = உன் தாமரை போன்ற திருவடிகளை தந்து = கொடுத்து புகழ் ஓதும் = (உன்னுடைய) புகழை ஓதும்.

பண்புடைய சிந்தை அன்பர் தங்களில் உடன் கலந்து
பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்

பண்புடைய சிந்தை  = பண்பு கொண்ட மனம் உடைய. அன்பர் தங்களில் உடன் கலந்து = அடியார்களுடன் சேர்ந்து. பண்பு பெற = நான் நற் குணம் அடைய வேண்டி அஞ்சல், அஞ்சல் என = பயப்பட வேண்டாம் என்று கூறி வாராய் = வருவாயாக.

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இ(ஈ)ண்டு
வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி

வண்டு படுகின்ற = வண்டுகள் ஓசை செய்யும் தொங்கல் = மாலையை கொண்டு = பூண்டு உற நெருங்கி இண்டு = மிக நெருங்கி அழுத்தமான வம்பினை அடைந்து = (முலைக்) கச்சு பூண்டதான சந்தின் = சந்தனக் குழம்பில் மிக மூழ்கி = மிக முழுகி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை
வந்து அழகுடன் கலந்த மணி மார்பா

வஞ்சியை = வஞ்சிக் கெடி போன்ற வள்ளியை முனைந்த = வருத்துகின்ற கொங்கை மென் குற மடந்தை = கொங்கைகளை உடைய  மெல்லிய வள்ளியின் செம் கை = செவ்விய கைகளை
வந்து அழகுடன் = அவள் இருக்கும் வள்ளி மலைக்கு வந்து கலந்த மணி மார்பா = கலந்த அழகிய மார்பனே.

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே

திண் திறல் புனைந்த அண்டர் = திண்ணிய வலிமை கொண்ட
தேவர்கள் தங்கள் அபயங்கள் கண்டு = தம்மாட்டு அபயம் புகுவதைப் பார்த்து செம் சமர் புனைந்து = செவ்விய போர்க்கோலம் பூண்டு துங்க மயில் மீதே = பரிசுத்தமான மயில் மேல்

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து
செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

சென்று அசுரர் அஞ்ச = சென்று அசுரர்கள் பயப்படும்படி வென்று = வெற்றி பெற்று குன்றிடை = திருப்பரங்குன்றத்தில்  மணம் புணர்ந்து மணம் செய்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே = செந்தில் அமர்ந்த பெருமாளே. 
சுருக்க உரை

இனிக்கும் சொற்கள், யானைத் தந்தம் பேன்ற கொங்கைகள், மேகம் போன்ற கூந்தல் என்று உவமை கண்டு, மிக வருந்தி, விலை மாதர்கள் வசப்பட்டு, எந்நாளும் விதியின் பயனாய் நின்று, பண்டை விதியின் தாக்கம் இது என்று அறிந்து, நான் வெந்து விழுவதைக் கண்டு, தாமரை போன்ற உன் திருவடிகளின் புகழ் ஓதும் அடியார்களுடன் கலந்து, நானும் குணம் அடைவதற்குப் பயப்படாதே என்று வரவேண்டும்.

கச்சு அணந்த வள்ளியை அடைய, அவள் இருந்த மலைக்கு வந்து அவளுடன் கலந்த மணி மார்பனே. வலிமை உள்ள தேவர்கள் தம்மிடம் அபயம் புகுவதைக் கண்டு, போர்க்கோலம் பூண்டு, மயில் மீது வந்து, அசுர்களை அழித்து, வள்ளியைத் திருப்பரங்குன்றத்தில் மணம் புரிந்த பெருமாளே, அஞ்சேல் என்று வந்து அடியார்களுடன் சேர அருள் புரிய வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

சந்து = சந்தனம். வஞ்சியை முனிந்த =   கொடி போலும் இடையை வருத்துகின்ற. 

No comments:

Post a Comment

Your comments needs approval before being published